புதுடில்லி: இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்தவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமை மீண்டும் பதவியில் அமரச்செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி கட்சி (முலாயம்சிங்) , திரிணாமுல்காங்., ( மம்தா) ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.

இதற்கிடையில் விஞ்ஞானி அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக்கிட அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல் காங்., விரும்புகிறது. இவரை நிறுத்தினால் ஓட்டுப்போட தயாராக இருப்பதாகவும், ஒத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ., காலத்தில் கலாம் ஜனாதிபதியாக இருந்து நற்பெயர் பெற்றவர் என்பதாலும், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், அரசியலுக்கு அப்பாற்றபட்டவர் என்பதாலும் இவருக்கு மே<லும் ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை மகாராஷ்ட்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய எரிசக்தி துறை அமைச்சருமான சுஷீல்குமார் ஷிண்டேவும் இதனை <உறுதி செய்துள்ளார். கலாம் ஜனாதிபதியாக்கிட மேற்கூறிய கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை நிலவியிருப்பதாக கூறியிருக்கிறார். ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.