Monday, January 31, 2011

அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாறும் தேர்தல் களம்

ட்டசபைத் தேர்தலுக்கான இட பங்கீட்டு தொடர்பான தேர்தல் வியூகத்தை மற்ற அரசியல் கட்சிகளை அசர வைக்கும் நிலையில் அ.தி.மு.க., வகுத்துள்ளது. இதனால், கூட்டணி அமைவதற்கான இறுதி கட்டத்தில், தேர்தல் களம் திசை மாறும் என கருதப்படுகிறது.

அ.தி.மு.க., அணியில் தற்போது உள்ள கட்சிகளுடன், நடிகர் கார்த்திக்கின், "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' இணைந்துள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
முரண்டு பிடித்தால் மூன்றாவது அணிதான் : தென் மாவட்டங்களில் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக, புதிய தமிழகம், சேதுராமன் தலைமையிலான மூ.மு.க., கார்த்திக் கட்சி ஆகியவற்றை தன் கூட்டணியில் ஜெயலலிதா சேர்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அ.தி.மு.க., பலமாக உள்ளது. இந்நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.,வுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அ.தி.மு.க., பக்கம் வந்தால், மொத்த தொகுதிகளையும் அள்ளிவிடலாம் என அ.தி.மு.க., கணக்கு போடுகிறது. சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுதால், அங்கும் அ.தி.மு.க., பலமாக உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் துணையோடு அதிக தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்ற முடியும். இந்நிலையில், மீதமுள்ள வடமாவட்டங்களில் வெற்றி பெற பா.ம.க.,வின் துணை கிடைத்தால் போதுமானது. பா.ம.க.,விற்கு அதிக பட்சம் 35 இடங்களை ஒதுக்கினால் வெற்றி எளிதாகி விடும் என்ற யோசனையும் அ.தி.மு.க.,விடம் உள்ளது.இந்த அரசியல் சூழலை புரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு நிபந்தனைகளை விதித்து, தே.மு.தி.க., தொடர்ந்து முரண்டு பிடிக்குமானால், அது மூன்றாவது அணி உருவாக காரணமாய் அமைந்துவிடும்.


Sunday, January 30, 2011

நாட்டிற்கே கடன் கொடுப்பார் கருணாநிதி : ஜெ.,ஆவேசம்

சென்னை : ""ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், நாட்டிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கு, உலகளவில் கருணாநிதி குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.



அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்களுக்கு சலுகை அளிப்பதற்காகவே, "முதலில் வருபவருக்கு, முதலில் வழங்குவது' என்ற அடிப்படையை ராஜா பின்பற்றியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். "ஸ்வான் டெலிகாம், யுனிடெக், லூப் டெலிகாம், அலையன்ஸ் இன்ப்ரா' போன்ற தகுதியில்லாத நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ராஜாவின் தயவால் பெற்றன.உரிமங்களை பெற்ற நிறுவனங்கள், தங்களுடைய பங்குகளை சில நாட்களுக்குள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று விட்டன. இத்தகைய, "லெட்டர் பேட்' நிறுவனங்கள், அடைந்த லாபம் தான் மக்களுக்கு கிடைத்த சலுகையா? ராஜாவால் பயனடைந்த பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை துவங்கவில்லை. இதில், மக்களுக்கு என்ன சலுகை கிடைத்தது என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய வருவாயை, கருணாநிதி குடும்ப கருவூலத்திற்கு திருப்பிவிட்டு இருக்கிறார் ராஜா. ராஜாவின் தவறான கொள்கையால் பயனடைந்தவர்கள் பொதுமக்கள் அல்ல; கருணாநிதியின் குடும்ப மக்கள்தான்.

அரசு, வணிக நோக்கோடு லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டால், அதன் மூலம் அரசுக்கு வரும் பணம், பொதுமக்களுக்காக, சமூக நன்மைக்காக பயன்படும். கருணாநிதி சொல்வதுபோல் ஒரு அரசு செயல்பட்டால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் பயனடையும். கருணாநிதி அறிக்கையில், "ஏலம் விடத் தேவையில்லை' என, "டிராய்' கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், "டிராய்' 2003ம் ஆண்டு பரிந்துரையில், கூடுதலாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய அரசு விரும்பினால், அதை ஏல முறையில் வழங்கலாம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதை ஏன் ராஜா பின்பற்றவில்லை? மொத்தத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கு, கருணாநிதி குடும்பத்தினர் உலகளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Friday, January 28, 2011

மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா : அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து



வாஷிங்டன் : இந்திய குடியரசு தினத்துக்கு, அமெரிக்கா அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தையொட்டி, பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. எம்.பி.,க்களான ஜோ க்ரோலே, எட்வர்ட் ராய்சி ஆகியோர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தனர். அமெரிக்க சமுதாயத்துக்கு இங்கு வாழும் இந்தியர்கள் பலர் சேவையாற்றி வருவதாக இவர்கள் குறிப்பிட்டனர்.







ஒபாமா விடுத்த வாழ்த்து செய்தியில், "இந்திய குடியரசு தினத்தை உலகத்தோடு சேர்ந்து நாமும் கொண்டாடுகிறோம். அமெரிக்காவை போல இந்தியாவும் மிகப்பெரிய ஜனநாயக நாடு. பல்வேறு இன மொழியை கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் நாடு. இதன் மூலம் மனித குலத்தை மதிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது' என்றார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிடுகையில், "21ம் நூற்றாண்டில் இந்திய - அமெரிக்க உறவு தவிர்க்க முடியாததாகி விட்டது' என்றார். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் மீரா சங்கர் தேசிய கொடி ஏற்றினார். ஜனாதிபதி பிரதிபாவின் உரை இந்த விழாவில் வாசிக்கப்பட்டது. நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ, ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Thursday, January 27, 2011

கட்சி தொண்டர்களிடம் கூட்டணி எதிர்பார்ப்பு: முடிவு தெரியாததால் தாமதமாகிறது பிரசாரம்

தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, தேர்தல் களம் சூடாகியுள்ளது. பிரதான கட்சிகளான தி.மு.க.,-அ.தி.மு.க.,வின் தலைமையில் இரு அணிகள் தயாராகி வருகின்றன. இந்த அணிகளில் இடம் பெறும் கட்சிகளின் விபரம் முழுமையடையாததால், தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கூட்டணி இறுதி செய்யப்படாததால், பிரச்சார திட்டங்களிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.





தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 13ம்தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேதிக்குள்ளாக, சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகத்தில் புதிய அரசு அமைய வேண்டும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தல் பணிக்கான முஸ்தீபுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது.தமிழக சட்டசபைக்கு 2006ம் ஆண்டு அமைந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தலைமையில் இரு அணிகள் அமைந்தன; தே.மு.தி.க., தனித்து களமிறங்கியது. தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.,-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க.,-ம.தி.மு.க.,- கம்யூனிஸ்டுகள் அடங்கிய ஒரு அணியும் தற்போதைய நிலையில் உறுதியாகியுள்ளது.







தமிழகத்தில் 10.5 சதவீத ஓட்டுவங்கியை வைத்திருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க., அணியிலும், சராசரியாக ஆறு சதவீத ஓட்டுவங்கியை வைத்துள்ள பா.ம.க., தி.மு.க., அணியிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய லோக்சபா தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை தழுவி, நான்கரை சதவீத ஓட்டுக்களை மட்டும் பா.ம.க., பெற்றது குறிப்பிடத்தக்கது.ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, கூட்டணி குறித்த அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடாததால், தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தே.மு.தி.க.,-பா.ம.க., ஆகிய கட்சிகள் சீட்டு பேரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுதான், இழுபறிக்கு காரணமாக உள்ளது.

தி.மு.க., கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ் - பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்தால் கூட்டணி இறுதியாகிவிடும். முதல்கட்டமாக 29ம்தேதி டில்லி செல்லும் முதல்வர் சோனியாவைச் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, காங்கிரசுக்கான தொகுதிகள் எத்தனை என்பது முடிவாகிவிடும்.அதற்கு அடுத்தபடியாய், பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிப்பங்கீட்டை முடிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 3ம்தேதி நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழு முடிவுக்குப்பின், கூட்டணி குறித்த இறுதி வடிவம் அறிவிப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., கூட்டணியில் சீட் பற்றாக்குறை இருப்பதால், ஒன்றிரண்டு தொகுதிகளை எதிர்பார்க்கும் குட்டிக கட்சிகள் இந்தப் பக்கம் வருவதற்கு யோசிக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும், அந்த அணியில் இடம்பெறுவதற்கு குட்டிக் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. அ.தி.மு.க., தலைமையும், அவர்களை அங்கீகரிக்க முன்வந்துள்ளது. இதன் காரமாக கூட்டணியை இறுதி செய்வதில், தாமதமும் ஏற்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணி இறுதி செய்யப்பட்டபின், தங்களது கூட்டணியை முடிவு செய்யலாம் என அ.தி.முக., காத்திருக்கிறது. வழக்கமாக தேர்தல் கூட்டணி, பிரச்சாரத்தில் முந்திக் கொள்ளும் அ.தி.மு.க., பொதுச் செயலர் இந்த முறை பின்தங்குவதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கூட்டணி முடிவுகள் தாமதமாவதால், பிரச்சார திட்டங்களும் தாமதமாகி வருகிறது.

Wednesday, January 26, 2011

போலீசாரை வசைபாடிய அமைச்சர்: அரசியல் கட்சியினரை சாடிய எஸ்.பி.,

"தி.மு.க.,வினர் மீது பழி போடுவதற்காக, மாணவர்களை சிலர் தூண்டி விடுகின்றனர். போலீசாரும் இதை கண்டும் காணாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது' என்ற, அமைச்சரின் பேச்சும், "சிங்கமே, சிறுத்தையே என, பேனர் வைக்கும் அரசியல் கட்சியினர், ரகளையில் ஈடுபடுவதும், அவர்களை நாங்கள் தண்டிப்பதுமாக உள்ளது' என, அரசியல் கட்சியினரை, எஸ்.பி., பேசியதும், சேலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் நேற்று முன்தினம் தீயணைப்பு நிலைய திறப்பு விழா நடந்தது. வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். அவர் விழா மேடைக்கு சென்று கொண்டிருந்தபோது, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வடசென்னிமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், அமைச்சர் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லூரியில், தொகுப்பூதியத்தில், பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் கோரி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதால், தங்களது படிப்பு பாதிப்பதாகவும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினர். பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், மாணவர்களை விரட்டியபோதும், சில மாணவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை தொடர்பாக காரசாரமாக முறையிட்டனர். அவர்களின் பேச்சால் ஆவேசமான அமைச்சர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அந்த கோபத்தை, அடுத்து நடந்த விழா மேடையில், போலீசார் மீது காட்டினார் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

பின்னர், கெங்கவல்லி விழாவில் பேசிய அமைச்சர், "மாணவர்களை ஆசிரியர்கள் தூண்டி விடுகின்றனர்; போலீசாரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது, எனக்கு வருத்தத்தை அளிக்கிறது' என்றார்.

இந்நிலையில், நேற்று சேலம் நேரு கலையரங்கில், தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.

அதில், சேலம் மாவட்ட எஸ்.பி., ஜான்நிக்கல்சன் பேசியதாவது:நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்... இங்கு கூடிய கூட்டம், கலெக்டருக்காக வந்த கூட்டம். மாநாடு, பொதுக்கூட்டம் எல்லாம் அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். "சிங்கமே வா, சிறுத்தையே வா' என, பேனர் வைக்கின்றனர்; அதையும் கிழிக்கின்றனர். கூட்டம் முடிந்து போகும் வழியில் பஸ் கண்ணாடியை உடைக்கின்றனர். இப்போது நடக்கும் இந்தக் கூட்டம் மனித நேயமிக்க கூட்டம்; மனிதனாக வா, மனிதனாக போ.இவ்வாறு ஜான்நிக்கல்சன் பேசினார்.

அரசியல் கட்சியினரை தாக்கி அதிரடியாக, எஸ்.பி.. பேசுகிறாரே என கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அண்மையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், அக்கட்சி தொண்டர்கள் சிலர் போலீசாரிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் ஆதரவாளரும், "சேலத்து சிங்கம்' என, பேனர், கட் அவுட் வைத்து, அவ்வப்போது போலீசாருடன் மோதல் போக்கை மேற்கொள்கின்றனர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே எஸ்.பி., பேசியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து எஸ்.பி., ஜான்நிக்கல்சனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அய்யய்யோ, யாரையும் நான் தாக்கி பேசவில்லை; சின்ன வயதில் இருந்தே விழாக்களில் நன்றாக பேசுவேன். மாணவர்கள் கலந்து கொண்டதால், அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக, மனிதனாக வா, மனிதனாக போ என, அறிவுரை வழங்கும் வகையில் பேசினேன். மற்றபடி யாரையும் நான் குறை கூறவில்லை. பிரச்னைகளில் மாட்டி விடாதீர்கள்.இவ்வாறு ஜான்நிக்கல்சன் கூறினார்.

திடீரென போலீசாரை அமைச்சர் கண்டித்து பேசியதும், அடுத்த நாளே, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் எஸ்.பி., "சிங்கமே, சிறுத்தையே' என, பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, January 23, 2011

அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க.,வை சேர்க்க பேச்சுவார்த்தை: தா.பாண்டியன்

திருநெல்வேலி:""அ.தி.மு.க., கூட்டணிக்குள் விஜயகாந்த் கட்சியை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என, இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் பேசினார்.அக்கட்சியின் தமிழ்மாநில நிர்வாக குழு கூட்டம், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது.




இதில் பங்கேற்ற மாநில செயலர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டோரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கும், விலைவாசி உயர்வுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு பல்வேறு இலவசங்களை வழங்குவதற்காக நபார்டு, உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. அந்த தொகை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என, அரசு வெள்ளைஅறிக்கை வெளியிடவேண்டும்.அ.தி.மு.க., கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. விலைவாசி உயர்வை கண்டித்து பிப்., 3 முதல் 9 வரை கூட்டணி கட்சிகளை இணைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அதில் பங்கேற்கவும், அ.தி.மு.க., கூட்டணியில் இணையவும் தே.மு.தி.க.,விற்கும் அழைப்பு விடுக்க உள்ளோம்.அவருடன், அ.தி.மு.க., சார்பில் பேசப்பட்டு வருகிறது.

கூட்டணி என்பதற்காக பா.ஜ., உள்ளிட்ட வேறு கட்சிகளுடன் இணைந்து அவர் போட்டியிடுவதாக இருந்தால், அதை நாங்கள் தடுக்க இயலாது. கூட்டணியில் இந்திய கம்யூ., கட்சிக்கு எத்தனை சீட்பெறுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை விரைவில் முடிவு செய்வோம். தேர்தலில் அ.தி.மு.க., தனிமெஜாரிட்டியுடன் வெற்றிபெறும்.தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து எங்களுக்கு நம்பிக்கையில்லை. தற்போது, அதுவும் ஒரு வகையில் தேர்தல் பிரசாரமாகி விட்டது. யாராவது அமைப்புகளுக்கு பணம் கொடுத்து தாங்கள் தான் வெற்றிபெறுவோம், என கூற வைக்கிறார்கள். அதை நம்பத்தேவையில்லை, என்றார்.கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Saturday, January 22, 2011

therthal

                                          தேர்தல் களம் ரெடி யாகி கொண்டிருக்குதே 



தனக்கு ஒண்ணு... தன் மகனுக்கு ஒண்ணு... மந்திரியின் அதிரடி, "பிளான்!' ""தனக்கும், மகனுக்கும் இப்பவே தொகுதியை ரெடி பண்ணிட்டாரு பா...!'' என, அரசியல் தகவலோடு விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.

""எந்த கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""ஆளும் கட்சியில தான் பா... அமைச்சர் பொன்முடி, விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளை, போட்டியிட வசதியா தயார் பண்ணிட்டு வராரு... இதுல, விழுப்புரம் அவருக்காம்... திருக்கோவிலூர் அவரது மகனுக்காம்...

""எதுக்கும் இருக்கட்டும்ன்னு, மூணாவதா விக்கிரவாண்டி தொகுதியையும் ரெடி பண்றாராம்... கூட்டணியில தொகுதி மாறினா, போட்டியிட வசதியா இருக்குமேன்னு தான் இந்த ஏற்பாடு பா...'' என்றார் அன்வர்பாய்.

""பத்து ரூபாய் நோட்டுகளை சேகரிக்காங்க வே...'' என்றபடி, அடுத்த தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.

""விக்கற விலைவாசியில, அதை சேகரிச்சு வைச்சு என்ன பிரயோஜனமுங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.

""விஷயத்தை கேளும்... பிறந்த நாள், பொங்கலுக்கு தன்கிட்ட வந்து வாழ்த்து பெறுவோருக்கு பத்து ரூபாய் நோட்டை முதல்வர் கொடுக்கறது வழக்கம்... இப்படி வருஷா வருஷம் வாங்கும் ரூபாய் நோட்டுகளை, சில உடன்பிறப்புகள் சேகரிச்சு வச்சிருக்காங்க...

""அதிலும், நாஞ்சில் மனோகரன் காலத்துல இருந்து பி.ஏ.,வா இருந்துட்டு வர்ற, தற்போதைய வருவாய் துறை அமைச்சரின் பி.ஏ., சின்னிகிருஷ்ணன், முதல்வர்கிட்ட வாங்கிய நோட்டுகளை எல்லாம் பத்திரமா பாதுகாத்துட்டு இருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

""சரி... அடுத்த தடவை, கருணாநிதியே முதல்வரா வந்தா, இதைச் சொல்லியே, பதவி நீட்டிப்பு வாங்கலாம்னு, "ஐடியா' வச்சிருக்காரோ, என்னவோ...'' என, "கமென்ட்' அடித்தார்
குப்பண்ணா.

""தொகுதி நிர்வாகிகளை நியமிக்க முடிவு எடுத்திருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.

"" எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""காங்கிரஸ் கட்சியில, கோஷ்டிப் பூசல் காரணமா, மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க முடியாத நிலை இருக்கு ஓய்... சட்டசபை தேர்தல் நேரத்துல நிர்வாகிகளை நியமிச்சா, அதிருப்தி ஏற்பட்டு தேர்தல் பணி பாதிக்கும்னு நினைக்கறா...

""அதனால, தேர்தலையொட்டி தொகுதி நிர்வாகிகளை நியமிக்க முடிவு செஞ்சிருக்கா... இதிலும் கோஷ்டி விவகாரம் வெடிக்க வாய்ப்பிருக்கு... அதனால, மேலிட தலைவர் முன்னிலையில, அனைத்து கோஷ்டி தலைவர்களையும் கூட்டி, ஆலோசனை நடத்தியதுக்கு அப்பறம் அறிவிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

""அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை காலி பண்ண எதிர்கோஷ்டிகாரங்க தவறான தகவலை பரப்பிருக்காங்க பா...'' என கடைசி மேட்டரில் நுழைந்தார் அன்வர்பாய்.

""எந்த எம்.எல். ஏ.,ங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ., அரி, தன் தொகுதி வேலைகளை ஆளுங்கட்சிக்காரங்களுக்கு கொடுக்கறதா, ஒரு கோஷ்டி புகார் எழுப்பியது சம்பந்தமா நாம பேசினோமே பா...

""தொகுதி வேலைகளை கட்சிக்காரங்களுக்குத்தான் எம்.எல்.ஏ., கொடுத்திருக்கார்... கட்சித் தலைமையின் அனுமதியோட தான், ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கார்... "எதிர்கோஷ்டியினர் தொடர்ந்து தவறான தகவலை பரப்பியிருக்காங்க'ன்னு எம்.எல்.ஏ., தரப்பில சொல்றாங்க பா...'' எனச் சொல்லி முடித்து புறப்பட்டார் அன்வர்பாய்; பெஞ்சில் அமைதி திரும்பியது.

Friday, January 21, 2011

kavalan

காவலுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார், யார்? விஜய் அதிரடி பேட்டி

இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.  காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:

காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை.                          இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இவ்வாறு விஜய் கூறினார். ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார்.

விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வாரா? என்று ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். வருகிற தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு,  பிரசாரம் செய்வது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை, என்றார்.

Sunday, January 16, 2011

pongal

pongal

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_Lh_EHcI5olBpWcIWjN-Dnf4GNsKdIgf4xsdSRbtiK7j5RePKtaBD4T3OxWD30MY2PKR5UIENpWvNQbHkybuzxfenLQNIbUXQaGi59brm6cCGhKk0m82_5cThdW6OT5Iw4uZynMS66582/s320/pongal.jpg

Saturday, January 15, 2011

காவலன்

காவலன் வெறும் படம் மட்டுமல்ல எனது பிரஸ்டீஜ்: விஜய்


kaavalan is not only film, its my prestige says vijay
பொங்கலுங்கு ரிலீசாகும் படங்களில் காவலன் படமும் ஒன்று, ஆனால் காவலன் படத்த்தை வெளியிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

டைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடித்துள்ள படம் காவலன். இப்படத்தை ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிடுகிறார். காவலன் படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது பொங்கலும் வந்துவிட்டது. ஆனால் பிரச்சனை தீர்ந்த பாடில்ல‌ை. நடிகர் விஜய்க்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையிலான பிரச்னை, இப்போது திசை மாறி தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையேயான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருவ‌தை பார்த்து கொதிப்படைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ் என்று ஓப்பனாக பேசிவிட்டார். எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று அதிரடியாக கூறிவிட்டார். அதன் விளைவு, படத்தை அவரே நேரடியாக வெளியிட இருக்கிறார். ஷக்தி சிதம்பரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து படத்தை வாங்கி விஜய்யும், பிரபல பைனான்ஸியர் ஒருவரும் சேர்ந்து வெளியிட இருக்கின்றனர்.

இதனையடுத்து காவலன் படம் இந்த பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீசாக உள்ளது. படத்தை நாளை வெளியிடாமல் பொங்கல் அன்று (15ம் தேதி) வெளியிடுகின்றன

சபரிமலை புல்மேடு விபத்து : பலி 106 ஆக உயர்வு

கூடலூர் : சபரிமலை அருகே பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஜீப் 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 106 பேர் பலியானார்கள் 90 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜோதியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்தனர். நேற்று இரவு ஜோதியை பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
புல்மேடு உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறினர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பியது, கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. பின் 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 106 பேர் பலியானார்கள். இதுவரை 46 பேரது உடல் அடையாளம் தெரிந்தது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து அங்கு திடீர் நெரிசல் ஏற்பட்டதால், நெரிசலில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பொங்கல் பண்டிக்கைக்காக புல்மேடு வழியாக பக்தர்கள் தமிழகம் நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோர் வண்டிப்பெரியார், கோட்டயம் மற்றும் தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்த தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி உதவி எண்: 04869- 222049 (குமுளி போலீஸ் ஸ்டேஷன்).

மத்திய அரசு உதவி : சபரி மலை விபத்தை தேசிய பேரிடர் நிகழ்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும். இதற்காக விபத்து நடத்த இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பியுள்ள மத்திய அரசு, சம்பவம் குறித்து கேரள மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கேரள அரசிற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளும் உதவுவதாக அறிவித்துள்ளன.

மீட்பு பணிகள் தாமதம் : சம்பவ இடம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருப்பதாலும், இருட்டாக இருப்பதாலும் மீட்பு பணிகள் தாமதமடைவதாக மீ்ட்பு குழுவினர் தெரிவித்தானர்.

Friday, January 14, 2011

கிடுகிடு!

பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல்: பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் திணறல்
பொங்கல் பண்டிகையை ஒட்டி, பஸ், ரயில், விமான கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளதால், சொந்த ஊருக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, 15, 16, 17ம் தேதிகள், அரசு விடுமுறை என்பதால், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பஸ் ஆப்பரேட்டர்கள், ஏஜன்டுகள், இடைத்தரகர்கள், டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி உள்ளனர். பஸ் ஆப்பரேட்டர்களே தங்கள் கட்டணத்தை கூடுதல் விலை வைத்து ஏஜன்டுகளிடம் ஒப்படைக்கின்றனர். இதில், ஏஜன்டு தங்கள் கமிஷனையும் சேர்த்து கட்டணம் வசூலிக்கின்றனர். இதுதவிர, சில இணையதளம், பஸ் ஆப்பரேட்டர்களிடம் நேரடியாகவும், ஏஜன்டுகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை புக்கிங் செய்கின்றனர். அவர்கள், 10 சதவீதம் கமிஷன் எடுக்கின்றனர். இதனால், கடைசியில், பயணிகள் தலையில் பெரும் தொகையாக விழுகிறது. ஒவ்வொரு டிக்கெட்டுக்கும், 100 முதல் 400 ரூபாய், இடைத்தரகர்களுக்கும், பஸ் ஆப்பரேட்டர்கள் கூடுதலாகவும் விற்பதால், பயணிகள் திகைக்கின்றனர். இதுபோன்று, விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதை தடுக்க, போக்குவரத்துத் துறை சார்பில், குழு அமைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இது வெறும் கண்துடைப்பாகவே அமைந்தது. டிராவல் ஏஜன்டுகள், ஆர்.டி.ஓ.,க்களுக்கு தலா 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மாமூல் செலுத்தி விடுவதால், அவர்கள் இந்த கட்டணக் கொள்ளையை கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

ரயில் டிக்கெட் கொடுமை: ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளுக்கு டிக்கெட் வழங்க, ரயில் நிலையங்களில் தனி கவுன்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள், பொதுமக்கள் வரிசையில் நின்று, மொத்தமாக டிக்கெட் எடுப்பதாக புகார் கூறப்படுகிறது. டிக்கெட் கவுன்டர்களில் உள்ள ரயில்வே ஊழியர்கள் பலர், டிராவல் ஏஜன்டு நிறுவனங்களை நடத்தி கொண்டு, அவர்களே, "தத்கல்' உள்ளிட்ட டிக்கெட்டுகளை, "புக்கிங்' செய்வதாக கூறப்படுகிறது. டிக்கெட் புக்கிங் கவுன்டர்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்றினால் மட்டுமே, இப்பிரச்னை தீரும் என்கின்றனர்.

"புக்கிங்' குறைவாக உள்ள மையங்களில், இந்த அதிகார பூர்வமற்ற ஏஜன்டுகள், ரயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்புடன் டிக்கெட்டுகளை போலி பெயர்களில் பதிவு செய்கின்றனர். இதில், அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளே ஓரங்கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆர்.பி.எப்., போலீசார் தங்கள் பங்கிற்கு, "தத்கல்' டிக்கெட்டுகளை பதிவு செய்கின்றனர். ஏஜன்டுகளிடம் ஆர்.பி.எப்., போலீசார் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், மக்களுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

விமான கட்டணம்: விடுமுறை காலங்களில் விமானக் கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தி விற்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, மும்பை, டில்லி ஆகிய ஊர்களுக்கு, 5,000 முதல் 7,000 ரூபாய் வரை இருந்த விமான டிக்கெட், தற்போது, 30 சதவீதம் கூடுதலாக விற்கப்படுகிறது.

Thursday, January 13, 2011

விலைவாசி உயர்வு பிரச்னையில் கூட்டணி ஆட்சியை கிண்டல் செய்த ராகுலுக்கு எதிர்ப்பு

புதுடில்லி : ""விலைவாசி உயர்வு பிரச்னைக்கு, சரத் பவாரை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டியது, ஒட்டுமொத்த அரசின் பொறுப்பு,'' என, ராகுலின் பேச்சுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மாணவர்களுடன் கலந்துரை யாடினார். அப்போது,"இந்திரா பிரதமராக இருந்த காலத்தில், பணவீக்கமும், விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பணவீக்கத்தையும், ஊழலையும் கட்டுப்படுத்தமுடியாதது ஏன்?' என, மாணவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல், "இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது. இன்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது. அதனால், சில நிர்ப்பந்தங்கள் உள்ளன. அதுவே விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம்' என்றார். விலைவாசி உயர்வுக்கு மத்திய உணவு மற்றும் விவசாய அமைச்சர் சரத் பவாரே காரணம் என, முன்னர் காங்கிரஸ் தலைவர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், தற்போது ராகுலும், "கூட்டணி ஆட்சியே காரணம்' என, தெரிவித்துள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சியை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் தாரிக் அன்வர் கடுமையாக கூறியதாவது: விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாததற்கு, விவசாய அமைச்சர் சரத் பவாரை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. அப்படிச் சொன்னால் அது அநீதியாகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது, ஒட்டுமொத்த அரசின் பொறுப்பு. அதனால், ராகுலின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.பீகார் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் எங்கு உள்ளது என்பதையும், அந்தக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நடப்பது கூட்டணி ஆட்சிக்காலம். கூட்டணி அரசுகளை நாம்புறக்கணிக்கக் கூடாது. இவ்வாறு தாரிக் அன்வர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலரும், அக்கட்சியின் தகவல் தொடர்பாளருமான திரிபாதி கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் காங்கிரசே முதன்மையான கட்சி. அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவரின் கருத்து, தாழ்வு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. ராகுலின் கருத்து துரதிருஷ்டவசமானது. பவார் உட்பட, எந்த ஒரு தனி அமைச்சரும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்க முடியாது, அதற்கு பொறுப்பாகவும் முடியாது. நான் எப்போதும் ராகுலை பாராட்டுபவன், அரசியலில் அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துபவன். அவர் தெரிவித்துள்ள கருத்து உண்மையின் அடிப்படையிலானது அல்ல. உணவு மற்றும் விவசாயத் துறையை கவனிக்கும் சரத் பவாரை, பிரதமர் மன்மோகன் சிங்கே பாராட்டியுள்ளார். தனிக்கட்சி ஆட்சி என்பதற்கு இனி வாய்ப்பே இல்லை. இவ்வாறு திரிபாதி கூறினார். இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த காங்., தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "ராகுல் பேசியது யாரையும் குறை கூறும் நோக்கில் இல்லை; பொதுவாகத்தான் பேசினார்' என்றார். ஆனால், கூட்டணி அரசியல் பற்றி தெரியாமல், ஏதோ பேசுகிறார் ராகுல் என, பா.ஜ., கருத்து தெரிவித்தது.

Wednesday, January 12, 2011

news

                   சூப்பர் பக் அடைமொழி : மன்னிப்பு கேட்டது பிரிட்டிஷ் பத்திரிகை
 
 







பெங்களூரு : சூப்பர் பக் மெட்டல்லோ பீடா லாக்டமேஸ் - 1, எனும் கிருமிக்கு இந்திய தலைநகர் புதுடில்லி அடைமொழியை அளித்ததற்கு பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை "தி லான்சட்" ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன் வருத்தம் தெரிவித்துள்ளார். சூப்பர் பக் கிருமிக்கு அப்ப‌டியொரு அடைமொழி வழங்கியது மிகப்பெரிய தவறு என்று அவர் கூறியுள்ளார். மேலும் அப்படி ஒரு அடைமொழி வழங்கப்பட்டதால் சர்வதேச அளவில் அது ஏற்படுத்திய தாக்கத்துக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
சூப்பர் பக் கிருமி பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஆழமானது ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட அடைமொழி மட்டும் தான் தவறானது. தவறான அடைமொழியை சூட்டியதால் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சூப்பர் பக் ஆராய்ச்சி கட்டுரையின் மீதான கவனம் திசைமாறிப் போனது என்றார்.

Tuesday, January 11, 2011

ayyappan kovil

சபரிமலையில் ரூ.500 கோடியில் புதிய திட்டங்கள்: ரோப் கார் பணி பிப்ரவரியில் துவக்கம்
ஜனவரி 11,2011
 
அ-
+
மதுரை : சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில், 500 கோடி ரூபாயில், "மாஸ்டர் பிளான் திட்டப் பணிகள் பிப்ரவரியில் துவங்கும் என, தேவசம் போர்டு உறுப்பினர் சிசிலி தெரிவித்தார்.மதுரையில் ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சீசன் காலத்தில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த, "சபரிமலை மாஸ்டர் பிளான் நிதி மூலம் 500 கோடி ரூபாயில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பம்பை, நிலக்கல், எரிமேலி மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பம்பை, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அன்னதான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், சுப்பிரமணிய பாதையை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த 11 கோடி ரூபாயில், அய்யப்பன் பாதை அமைக்கும் பணிகளும் நடைபெறும். அப்பல்லோ, அமிர்தா மருத்துவமனைகள் சேவை அடிப்படையில் சிகிச்சைகள் அளித்து வருகின்றன. நீலிமலை, அப்பாச்சிமேட்டில் மருத்துவ சிகிச்சைகளுக்காக கட்டடம் கட்டப்படும். பம்பை - சன்னிதானத்திற்கு ஒன்பது கோடி ரூபாயில் ரோப் கார் அமைக்கும் பணிகளும் நடக்கும். இதில், அடுத்த ஆண்டு முதல் சரக்குகள் மட்டும் கொண்டு செல்லப்படும். இப்பணிகள் அனைத்தும் பிப்ரவரியில் துவங்கும்; ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர சங்கத்திற்கு, ஏற்கனவே 2005ம் ஆண்டில் அமைந்த போர்டு சார்பில் கட்டடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய போர்டு, ஐந்து மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது. சங்கத்திற்கு மூன்று மாடியில் கட்டடம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறும். இவ்வாறு சிசிலி தெரிவித்தார்.

Saturday, January 8, 2011

பொய்மை காதல்

 *கண்களுக்கு மெய்களை இட்டு அழகாக்குவதை  விட
காதலுக்கு     பொய்களை இட்டு வெற்றி பெறச் செய்து  அழகாக்குவதே சிறந்தது *

உடைந்த கடவுள்

அன்றெல்லாம்
சுடுகாட்டில் இருக்கும்
வெட்டியான்களை எல்லாம்
விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை
பேய் தின்று விடுமோ என்றே  
பயம் வரும்
இன்றும் அதே பயம்
வீடு சுற்றி
நாடு சுற்றி
மனசாட்சியை கொன்றுகொண்ட
பேய்களே உலவுகிறது;
சுடுகாடே -
மேல்போல்!!
வாழ்க்கை
வெங்காயம் போல்
என்றார் யாரோ;
உரிக்க உரிக்க
கண்ணீ­ராம்.
உரிபடுவதேயில்லை
இப்போதெல்லாம்
நிறைய பேரின் வாழ்க்கை;
வெங்காயம் என்று
வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில்
கண்ணீ­ர் மட்டும் மிட்சம் போல்.
என்னை கேட்டால்
வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள்
வாழுங்கள் என்பேன்!!
நிறைய வீடுகளில்
நிறைய அறைகள்
புழக்கமின்றியே கிடக்கிறது;
வீடற்று இருப்பவர்களை பற்றி
அந்த அறைகளுக்கு
எந்த கவலைகளும் இல்லை,
தெருவில் உண்டு
உறங்கி
புணர்ந்து 
தலைமுறைகளை கடக்கும்
ஒரு சாமானியனின் தேவை
நான்கு சுவர் மட்டுமே என
அந்த -
வெற்றுக் கட்டிடமான
கல் மண் கலவைகளுக்குப் 
புரிவதேயில்லை!
எனக்குத் தெரிந்து
கல் சுமக்கும்
பீடி சுற்றும்
உணவகத்தில் மேசை துடைக்கும்
பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும்
தேநீர்கொண்டு வந்து கொடுக்கும்
சிறுவர்களின் வியர்வையில் தான்
நசுக்கப் படுகின்றது
நம் தேசத்தின்
முன்னேற்றத்திற்கான விதைகள்!

மல்லுகட்டிய ஆதரவாளர்கள்... மன்னிப்பு கேட்ட அதிகாரி...

Swine Flu

ஏடியெம்கே வட்டாரத்துல எதுக்காக இந்த அவசரம்னு தெரியல... எல்லா இடத்துலயும் இப்பவே பேனர் வைக்க ஆரம்பிச்சுட்டா பாத்தேளா...’’ என்று கேட்டாள் சுசிலா மாமி.
“இன்னும் ஒரு மாசத்துல பாரு... எல்லா கட்சிகளும் வரிஞ்சு கட்டிட்டு இறங்கிடும்... இன்னொரு விஷயம் தெரியுமா... ஏடியெம்கேல போட்டியிட விரும்பறவங்கட்ட விருப்ப மனு வாங்குவாங்க... பத்தாயிரம், பதினைஞ்சாயிரம்னு பணம் கட்ட சொல்லுவாங்க... அதுக்கான தேதிய பிக்ஸ் பண்ணிட்டு கடைசி நேரத்துல கேன்சல் பண்ணிட்டாங்களாம்...’’ என்று சொன்னார் பீட்டர் மாமா.

‘‘பிப்ரவரி ஒண்ணாம் தேதினு சொன்னா... காரணமில்லாமலா தள்ளிவைப்பா...’’ என்றாள் சுசி மாமி.
“9ம் தேதி கன்னியாகுமரியில நடக்கற நிகழ்ச்சிதான் காரணமாம்... அதுக்காக 8ம் தேதி ஜெயலலிதா கட்சி ஆபீசுக்கு வர்றதா இருந்த புரோகிராமும் கேன்சல்... நிறைய பேர் கட்சில இணையற ஏற்பாடெல்லாம் நடந்துச்சாம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அதுக்குப் பதிலா 17ம் தேதி கட்சி ஆபீசுக்கு ஜெயலலிதா வர்றாங்களாம்... தொடர்ச்சியா 19ம் தேதியும் ஏதோ நிகழ்ச்சி வெச்சிருக்காளாம்...’’ என்று சுசி மாமி சொன்னாள்.
‘‘தேசிய கட்சிக்காரங்க கூட்டம் நடத்த இடம் தேடி அலையறாங்களாமே... என்ன பிரச்னையாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

“திருவொற்றியூர்ல நவம்பர் 19ல் தொடங்கின பீஜேபி யாத்திரை 29ம் தேதி சென்னையில முடியறதாம்... முடியற இடத்துல பொதுக்கூட்டம் நடத்தறா... டெல்லி லீடர்ஸ், கூட்டணி கட்சிக்காராள எல்லாம் கூப்பிட்டிருக்காளாம்... கூட்டம் நடத்தறதுக்குதான் பெரிய மைதானம் கிடைக்கலையாம்... எழும்பூர்  ஸ்டேடியம் பக்கத்துல ஆர்ப்பாட்டம் நடத்தறதா பெர்மிஷன் வாங்கிட்டாளாம்... ஆனா, கூட்டம் அதிகம் இருக்கும்னு எதிர்பாக்கறா... அதனால வேற இடம் தேடறாளாம்... கட்டுக்கடங்காத கூட்டம்னு சொல்ற அளவுக்கு தொண்டர்கள கூட்டிட்டு வரணும்னு மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவாம்...’’ என்று விளக்கம் சொன்னாள் சுசி மாமி.

‘‘ஏடியெம்கேல ரிடையர்டு போலீஸ் ஆபீசர் ஒருத்தர் சேர்ந்திருக்காரே... செய்தி படிச்சியா...’’ என்று கேட்டு பேச்சை மாற்றினார் பீட்டர் மாமா.
“ஏடியெம்கே பீரியடுல டிஜிபியா இருந்தவராச்சே... அப்பவே ஆட்சியில இருந்தவாளோட திடீர்னு கருத்து வேறுபாடு வந்ததா சொன்னா... தமிழ்நாட்டுல இருக்க விரும்பாம மத்திய பணிக்கு போயிட்டார்னு தகவல்...’’ என்று சுசி மாமி சொன்னாள்.

‘‘உண்மைதான்... கருப்புபூனை படை தலைவரா சேர்ந்தார்... பணிச் சுமை காரணமா மறுபடியும் தமிழகப் பணிக்கு வந்துட்டார்... ரிடையர் ஆனதும் சும்மா இருக்க முடியல... எம்பியாகலாம்னு கணக்கு போட்டு ஏடியெம்கேல சேர்ந்துட்டதா அவரோட பழைய போலீஸ் ப்ரண்ட்ஸ் சொல்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சேலத்துல ஒரு எம்மெல்லேக்கு அதிகாரிகள் கொடுத்த டாக்டர் பட்டம் பத்தி தான் பரபரப்பா பேசிண்டிருக்காளாமே...’’ என்று அடுத்த விஷயத்தை ஆரம்பித்தாள் சுசி மாமி.
“அந்த விஷயமா... ஆத்தூர்ல ஆர்டிஓ ஆபீஸ் பில்டிங் ஓப்பனிங் பங்ஷன்... ரெண்டு மினிஸ்டர்ஸ் கலந்துட்டாங்க... விழா அழைப்பிதழ்ல தொகுதி எம்பி பெயரை விட்டுட்டாங்க... அழைப்பிதழ்ல ஏடியெம்கே எம்மெல்லேக்கு டாக்டர் பட்டம் கொடுத்துட்டாங்க...

அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு விஷயம்... இன்னொரு எம்மெல்லே டாக்டராம்... அவங்களுக்கு போட வேண்டிய பட்டத்தை இவருக்கு போட்டுட்டாங்களாம்...கடுப்பான அவரோட ஆதரவாளர் அதிகாரிகள்ட்ட மல்லுக்கு போயிட்டாங்க... எம்பியோட ஊருக்கே போய் மன்னிப்பு கேட்டுட்டு வந்துருக்கார் அந்த அதிகாரி... அதோட நின்னா பரவாயில்ல... புதுசா ஒரு அழைப்பிதழ் அடிச்சு கொடுத்துருக்கா...’’ என்று முழு பின்னணியையும் பீட்டர் மாமா சொல்லி முடித்ததும், வீட்டு வேலைகளை கவனிக்க சென்றாள் சுசி மாமி.                   

welcome

தோல்வியை கண்டு அஞ்சுபவனிடம் வெற்றி விலகி செல்லுகிறது .