Friday, September 30, 2011

உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்: விஜயகாந்த்




பெரம்பலூர்: விஜயகாந்த் தனியாக வந்து பேசுவதாக நினைக்காதீர்கள். தெய்வம் எப்போதும் நேரில் வராது. மக்கள் ரூபத்தில் தான் வரும். கடந்த சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன். இப்போதும் தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி அமைத்துள்ளேன். இன்னைக்கு நான் வருத்தப்படல


. இன்னைக்கு தே.மு.தி.க.,வை நம்பி மா.கம்யூ., இ.கம்யூ., நம்பி வந்தாங்க அவுங்கல கூட்டணியில சேர்த்துக்கிட்டோம். ஏனென்றால் நம்பினார் கெடுவதில்லை. என்னால் முடிந்ததை நான் போராடுவேன். இதில் என் கட்சி தொண்டருக்கும் பங்குண்டு. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிறது. மக்களிடம் வீட்டுவரி சொத்துவரி போன்ற பல்வேறு வரிகள் வசூல் செய்கின்றனர். ஆனால் இன்னும் ரோடு பிரச்சனை குடிநீர் பிரச்சனை, பஸ் பிரச்சனைகள் எல்லாம் உள்ள

து. அதைப்பற்றி உள்ளாட்சி கவுன்சிலர்கள் யாரும் கவலைப்படவில்லை. நல்ல முட்டையா என்று தண்ணீரில் போட்டு பார்க்கிறீங்க கத்தரிக்காய், வெண்டைக்காய், மீன் போன்றவற்றை நல்லதா என பார்த்து பார்த்து வாங்குறீங்க உள்ளாட்சி பதவி 5 ஆண்டுக்கு உள்ளது எனவே உங்களை பாதுகாக்குற ஒரு ஆட்சியை

தேர்ந்தெடுங்க. என்னோட கவுன்சிலர லஞ்சம் வாங்க விடமாட்டேன். நான் மீண்டும் வருவேன். வந்து மக்களுக்கு நல்ல செய்றாங்களான்னு பார்ப்பேன். பெரம்பலூர் மாவட்டத்துல பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. உள்ளாட்சி நிதியை வீணடிக்கிறாங்க. மக்களை ஏமாத்துறாங்க. இதுபோல 60 வருசமா மக்களை ஏமாத்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். நான் காசுக்கு அடிமையாக மாட்டேன். என்னை காசு கொடுத்து யாரும் விலைக்கு வாங்க முடியாது.

எனக்கு ஓட்டுபோட்டு ஜெயிக்கவைத்தீர்கள். நான் எப்போதும் நன்றி மறக்கமாட்டேன். நான் தனியாக வருவேன் நேற்று தே.மு.தி.க.,வுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.,க்கள். நாளை நீங்கள்தான் முடிவு செய்யனும். மக்களுக்காக விஜயகாந்த் வாழ்தான் என சரித்திரம் எழுதனும். எழுத வைப்பேன். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் இளைஞர்களுக்காக கல்லூரி துவங்குகிறேன் என பல கல்லூரிகள் துவங்க அனுமதிதாராங்க. ஆனால் காசு வாங்கி கொண்டுதான் கல்லூரியில் சீட் கொடுக்கின்றனர். சாதி கட்சிகள் இரண்டும் இன்று திராவிட கட்சிகளோடு இணைந்து காசு சம்பாதித்துவிட்டு இன்று திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் தேவையில்லை என்று கூறுகின்றனர். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கூறும் ஒரு சாதி கட்சி தலைவர் அவரது கட்சியில் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை. என்னோட மக்கள தூண்டுவிட்டு சண்டைப்போட விடாதீங்க. சாதியை பற்றி பேசாதீர்கள். நான் கட்சி ஆரம்பிச்சப்ப 71வது கட்சி சொன்னார்கள் இப்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் 1வது கட்சியாகிவிட்டது. உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பாருங்கள். எங்களை வெற்றி பெற வைத்தால் தவறுகள் நடக்காது. எத்தனை காலம் தான் நீங்கள் ஏமாந்து கொண்டிருப்பது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் வராது. எனவே தே.மு.தி.க., கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பீர். இவ்வாறு அவர் பேசினார்.