Monday, April 11, 2011

தமிழக தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது., நாளை மறுநாள் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் !


சென்னை: ஒரு மாதகால பிரசாரம் முடிந்து இன்று மாலையுடன் எவ்வித சலனமுமின்றி அமைதியாக முடிந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் விஜயகாந்த் பிரசார வாகனத்தின்மீது செருப்பு வீசப்பட்டது. பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லை. இதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரையடுத்து தேர்தல் அதிகாரிகள் , ராமநாதபுரம் , வாடிப்பட்டி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி ரூ. 5 லட்சம் வரை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேனி மாவட்ட தி.மு.க., பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கட்சி தலைவர்களின் பிரசாரம் : தி.மு.க., தலைவர் கருணாநிதி ( திருவாரூரிலும்) , அ.தி.மு.க., தலைவர் ஜெயலலிதா( சென்னையிலும்) , தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ( ரிஷிவந்தியத்திலும்),இந்திய கம்யூ., அகில இந்திய செயலாளர் டி. ராஜா (வத்திராயிருப்பிலும்) , மா.கம்யூ., மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ( திண்டுக்கல்லிலும் ) இன்று பிரசாரம் செய்து நிறைவு செய்தனர். உள்பட அனைத்து பெரிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி பிரசாரம் செய்தனர் சினிமா நடிகர்களுக்கு கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதை காண முடிந்தது.


தேர்தல் கமிஷன், கடும் விதிமுறைகளை அமல்படுத்தியதால், தமிழகத்தில் எங்கும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கவில்லை. காதை கிழிக்கும் "லவுடு ஸ்பீக்கர்' சத்தம், சுவர்களை பாழாக்கும் போஸ்டர், சாலையை மறைக்கும் "பிளெக்ஸ்' போர்டு என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை தேர்தல் நடக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில், பிரசாரம் அமைந்தது.


போட்டி: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் தலா 234 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 207 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சென்னையில் உள்ள தொகுதிகளில் அதிபட்சமாக 274 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் 19ம் தேதி துவங்கி, 30ம் தேதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டுப் பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது.எனவே, இடைப்பட்ட 14 நாட்களில், தமிழகம் முழுவதும் கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இது தவிர, பிரதான இரண்டு கூட்டணிகளிலும் ஸ்டார் பிரசாரகர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, இரு தரப்பிலுமே மாறி மாறி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கப்பட்டு, சேறு வாரி இறைக்கப்பட்டன. இதுவரை தேர்தல்களில் இல்லாத அளவு தனிப்பட்ட விமர்சனங்களை தி.மு.க., அணியினரும், அ.தி.மு.க., அணியினரும் மேற்கொண்டனர். தற்போது இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபடனர்.
இன்று மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் நடத்தியோ, மைக் மூலமாகவோ யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. எனினும், வீடு வீடாகச் சென்று அமைதியாக ஓட்டு சேகரிக்கலாம். தொகுதியில் வாக்காளராக இல்லாத எவரும் அந்த தொகுதிக்குள் இருக்கக்கூடாது. லாட்ஜ்கள், மண்டபங்கள் போன்றவற்றில் சம்பந்தமில்லாதவர்கள் தங்கி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.