Sunday, February 13, 2011

நிரா ராடியா நண்பர்களை விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை


சென்னை : ""நிரா ராடியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கை: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சி அமைத்த போது நடந்ததாக கூறப்படும் 600 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை, தொலைத்தொடர்பு துறை ராஜாவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் கனிமொழி அதிக ஆர்வம் காட்டியது, கனிமொழியின் தாயார் ராஜாத்திக்கு சென்னையில் முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என, டாடாவிடம், ராஜாத்தி கோரிக்கை வைத்தது ஆகிய அனைத்தும், மிகவும் ஆழமாக கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டியவை. அமைச்சர்களை நியமனம் செய்யும் பிரதமரின் தனிப்பட்ட உரிமையை வெளி நபர்கள் பறித்து கொண்டது குறித்த உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால், கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தி உட்பட நிரா ராடியாவுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.