Sunday, February 27, 2011

தி.மு.க., ஆட்சி தொடரும்; நானும் இருப்பேன்: கருணாநிதி உறுதி


சென்னை: ""மக்கள் ஆதரவுடன் தி.மு.., ஆட்சியும் தொடரும்; நானும்இருப்பேன். திட்டப்பணிகளும் தொடரும். ஆறு ஆண்டுகளில் தமிழகம்குடிசைகள் இல்லாத முதல் மாநிலமாக மாறும் ,'' என முதல்வர் கருணாநிதிபேசினார் .


சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., சேகர்பாபு ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணையும் விழா தண்டையார்பேட்டையில் நேற்று மாலை நடந்தது. இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: வடசென்னை பகுதி தி.மு.க., துவங்கிய இடம். அன்று பலரால் இட்ட விதை இன்று மரமாகி அதன் நிழலில் நாம் உள்ளோம். எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., கப்பல் திசை மாறி செல்கிறது. திசை மாறும் கப்பலில் இருக்க வேண்டாம். என சேகர்பாபு வந்துவிட்டார். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருக்க தகுதியில்லை; அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்குங்கள் என சொன்னவர் தான் இந்த அம்மையார்.


தமிழகத்தில் எத்தனையோ பிரச்னை இருந்தாலும், தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டது. யாருக்கு எத்தனை இடங்கள்; எந்தெந்த தொகுதிகள் என கட்சித்தலைவர்கள் பேசி முடிவெடுத்து, தொகுதியை அடையாளம் காட்டி, பேசும் காலமாக உள்ளது. மக்களாட்சி தத்துவத்தை உணர்ந்து மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, குறைந்தவிலைக்கு சமையல் பொருட்கள் கொடுத்து ஏழைகளின் வயிற்றுப்பசியை தீர்க்கும் ஆட்சியை நடத்துகிறோம். தமிழகத்தில் குடிசை இல்லா மாநிலமாக்க குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாறும். அதுவரை நான் இருப்பேனா என்பீர்கள். நீங்கள் இருக்கும்போது நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும். துவக்கிய எல்லா திட்டங்களும் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


நன்றி


தினமலர்